ஆப்நகரம்

கொடுத்தது 17 பொருள்; அதிலும் வெல்லத்தில் நோயாளி ஊசி… அரசின் பொங்கல் பரிசு சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் கிராமத்தில் நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வெல்லத்தில் ஊசி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 6:43 pm

ஹைலைட்ஸ்:

  • குமரியில் குறைவாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு
  • வெல்லத்தில் நோயாளிக்கு பயன்படுத்து ஊசி
  • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tn pongal gift injection syringe
பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளை பகுதியை சேர்ந்த ஜெயகுமாரி என்பவர் கடந்த வாரத்திற்கு முன்பு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கியுள்ளார். அதில், அவருக்கு 21 பொருட்களுக்கு பதிலாக 17 பொருட்கள் மட்டும் கடை ஊழியர் வழங்கியதாக கூறப்படுகிறது.

தனக்கு கிடைத்த பொருட்களை வீட்டிற்கு எடுத்துச்சென்ற ஜெயகுமாரி வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். தொடர்ந்து ஜனவரி 15-ஆம் தேதி சனிக்கிழமையான நேற்று முந்தினம் காலை பொங்கல் வைப்பதற்க்காக தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து வீட்டு வாசலில் புதுப்பானையை வைத்து பொங்கல் வைக்க முயன்றுள்ளார்.

அப்போது, பொங்கலில் போடுவதற்காக ரேசன் கடையில் கொடுத்த வெல்லத்தை பொடி செய்ய முயன்றுள்ளார். அப்போது, வெல்லக் கட்டியில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசிப்போட பயன்படுத்தும் சிரஞ்சி ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், செய்வதறியாமல் தவித்த ஜெயக்குமாரி, ஊராட்சி தலைவரை தொடர்பு நடந்ததை கூறியுள்ளார். பின்னர், ஜெயக்குமாரி கூறியது உண்மைதானா என்பதை அறிய ஊராட்சி மன்ற ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து உணவுப்பொருள் பாதுக்காப்பு துறை அதிகாரிகள் மற்றும் வட்டவழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து கூறி உள்ளார். ஆனால், அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்வையிடாமல் மெத்தன போக்கை கையாண்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண் ஜெயக்குமாரி குற்றம்சாட்டியுள்ளார்.
பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தை திருவிழா… திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

ஏற்கனவே அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு தரமானதாக இல்லை எனவும், எண்ணிக்கையில் குறைவாக உள்ளதாகவும் எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக திருத்தணி அருகே புளி பொட்டலத்தில் இறந்த நிலையில் பள்ளி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது குமரியில் வெல்லத்தில் ஊசி இருந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி