ஆப்நகரம்

குமரியில் ஒருவழியாகத் தொடங்கிய படகு சேவை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கியது.

Samayam Tamil 25 Nov 2020, 2:55 pm
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் அடையாளமாக திகழும் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது, சுற்றுலா பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இந்த படகு போக்குவரத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Samayam Tamil kumari rocks


சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து குமரியின் அடையாளமாக திகழும் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை படகுகளில் சென்று கண்டு ரசிப்பது வழக்கம்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் படகு போக்குவரத்தை இயக்க வேண்டும், மேலும் புதிய படகுகளை கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டே திறந்தாச்சு..! திருச்சி காந்தி மார்க்கெட்டை திறப்பதில் என்ன சிக்கல்?

அதனை ஏற்ற தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இயக்கப்படும் என அறிவித்தார், இந்நிலையில் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது, சுற்றுலா பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இந்த படகு போக்குவரத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி