ஆப்நகரம்

முதல்வர் சொல்லியாச்சு... ஆனாலும் திறக்கல: பயணிகள் ஏமாற்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா ஆய்வு நடத்த வந்த போது குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்திருந்தார்.

Samayam Tamil 12 Nov 2020, 7:31 pm
குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க ஆணை பிறப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Samayam Tamil edappadi


இதனால் சுற்றுலா பயணிகள் விரக்தியில் திரும்ப சென்றனர்.சுற்றுலா தலங்களை திறக்க உரிய ஆணை கிடைக்காததால் திறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வந்த காரணத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் முழு ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான சுற்றுலா தலங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரை அரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

நாளடைவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து காரணத்தால் மத்திய அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் படிப்படியாக ஊரடங்கில் தழர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு நடத்த வந்த போது குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்திருந்தார்.

மதுரை போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!

இதனை தொடர்ந்து குமரி மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தார் தொட்டிபாலம், கன்னியாகுமரி படகு நிலையம் உள்ளிட்டவை அனைத்தும் இன்று முதல் திறக்கும் என்ற எண்ணத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் உள்ளே அனுமதிக்காததால் விரக்தியுடன் திரும்பி சென்றனர்.

மேலும் முதல்வரின் அறிவிப்பை நம்பி சுற்றுலா கடைகளை திறக்க வந்த வியாபாரிகளுக்கும் அதிர்ச்சியே காத்திருந்தது. முதல்வர் சுற்றுலா தலங்களை திறக்க உத்தரவு பிறப்பித்த பின்பும் இதுவரை சுற்றுலா தலங்களை திறக்காமல் இருக்கும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சுற்றுலா தலங்களை திறந்து பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி