ஆப்நகரம்

கன்னியாகுமரி: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில்​​ சட்டமன்றத் தேர்தல் தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், குமரியில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.

Samayam Tamil 22 Sep 2020, 8:27 am
விருதுநகரில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தல் பணிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil வாக்குப் பதிவு எந்திரம்


விருதுநகரில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் தற்போது விருதுநகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பலத்த சீல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தல் பணிக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் தேவைப்படும் நிலையில் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை மேற்பார்வையிட்டார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதன் பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டன.

பள்ளிகள் திறப்பு: அண்டை மாநிலங்களை பின்பற்றுமா தமிழகம்?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், குமரியில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்துள்ளதையடுத்து குமரியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமடைந்துள்ளது.

அடுத்த செய்தி