ஆப்நகரம்

வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்; மகாத்மா காந்தியை பிரமாண்டமாக வரைந்து அசத்திய கல்லூரி மாணவர்கள்!

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் மகாத்மா காந்தியின் படத்தை பிரமாண்டமாக வரைந்து அசத்தியுள்ளனர் கன்னியாகுமரி கல்லூரி மாணவ, மாணவர்கள்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 9 Aug 2022, 12:20 pm
வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 கல்லூரி மாணவ, மாணவிகள் வரைந்த பிரமாண்ட மகாத்மா காந்தியின் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகத்தை உணர்த்தும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Samayam Tamil மகாத்மா காந்தியை பிரமாண்டமாக வரைந்து அசத்திய கல்லூரி மாணவர்கள்


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15 வது மாநில, மாநாடு வருகின்ற 12 ம் தேதி துவங்கி 15 ம் தேதி வரை மார்த்தாண்டத்தில் நடைபெறும் நிலையில் இந்த நிகழ்வுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 75 வது சுதந்திர தினம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகத்தை உணர்த்தும் விதமாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பல்வேறு கலை நிகழ்வுகளை நடத்தி வரும் நிலையில், வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்வில் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 75 மாணவ மாணவிகளின் கைவண்ணத்தில் மகாத்மா காந்தியின் மெகா ஓவியம் வரையப்பட்டு பின்னர் வண்ணம் தீட்டி பார்வைக்காக வைக்கப்பட்டனர்.

நாகர்கோவில்: தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட வாலிபர் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி