ஆப்நகரம்

காலி பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்க கூடாது - கன்னியாகுமரி போலீசார் அதிரடி உத்தரவு!

காலி பாட்டில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Sep 2022, 3:24 pm

ஹைலைட்ஸ்:

  • காலி பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது
  • யாரேனும் பாட்டிலில் பெட்ரோல் கேட்டால் காவல்துறைக்கு தகவல் தரவேண்டும்
  • கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது‌
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கன்னியாகுமரி போலீசார்
காலி பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது எனவும், யாரேனும் பாட்டிலில் பெட்ரோல் கேட்டால் காவல்துறைக்கு தகவல் தருமாறும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கடந்த 3 தினங்களில் பாஜக, இந்து முன்னணி மற்றும் ஆா்எஸ்எஸ் பிரமுகா்களின் இல்லங்கள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் வாகனச் சோதனை, பாஜக பிரமுகா்களின் அலுவலகங்களில் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.


அதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் கேட்டு வருவோருக்கு அவா்கள் கொண்டு வரும் காலி பாட்டில்களில் வழங்கக் கூடாது என அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். யாரேனும் பாட்டிலில் பெட்ரோல் கேட்டு வந்தால் அவர்கள் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தருமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

ஃபுட் போர்ட் அடித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்; சாட்டையை சுழற்றிய போலீசார்!

மேலும், நாகர்கோயில் மாநகரத்தின் முக்கிய பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்களில் சோதனையும் நடைபெற்றது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகின்றதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி