ஆப்நகரம்

கொரோனாவைக் குறை ஆண்டவா!.. மும்மதக் கோயில்களில் திமுகவினர் வேண்டுதல்

​​மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில், குளச்சல் அக்கரை முஸ்லிம் பள்ளிவாசல், கொட்டில்பாடு கத்தோலிக்க தேவாலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.

Samayam Tamil 1 Aug 2020, 8:05 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்திட இறைவனை வேண்டி திமுகவினர் மும்மத ஆலயங்களில் பிராத்தனை செய்துள்ளனர்.
Samayam Tamil பகவதி அம்மன் கோயில் வழிபாடு


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறையவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடையவும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் உடல்நலன் காக்கவும் இறைவனை வேண்டி குருந்தன்கோடு வட்டார திமுக வினர் இணைந்து மும்மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில், குளச்சல் அக்கரை முஸ்லிம் பள்ளிவாசல், கொட்டில்பாடு கத்தோலிக்க தேவாலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.

சேரியில் வாழ்பவர்கள் 57% கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளது!

இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்று திமுகவைக் குறித்துப் பலரும் பேசிவரும் நிலையில், அதன்மீதான விவாதத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி