ஆப்நகரம்

Onam Festival: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரும் என விவசாயிகள் நம்பிக்கை!

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்பு கேரளாவில் இந்த ஆண்டு திருவோண பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சரிந்து போன தங்கள் பூ வியாபாரம் மீண்டும் செழிக்கும் என குமரி மாவட்ட பூ விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 18 Aug 2022, 4:55 pm

ஹைலைட்ஸ்:

  • கேரள மக்களால் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை
  • சரிந்த பூக்களின் விலை உயரும் என கன்னியாகுமரி விவசாயிகள் எதிர்பார்ப்பு
  • தோவாளை மலர் சந்தையில் பூக்களை அதிக அளவில் வாங்கும் மக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil poo
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை, தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா மாநில அளவிலும் புகழ் பெற்றதாகும். ராயக்கோட்டை, ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என பல பகுதிகளிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தினந்தோறும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் எட்டாம் தேதி கேரள பண்டிகைகளில் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்ற, கேரளா மக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் 10 நாட்களாக கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்த பத்து நாட்களில் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ எனப்படும் பூக்கோலமிடுவது வழக்கம். இந்த பத்து நாட்களில் சிறந்த அத்தப்பூ கோலம் இடுபவர்களுக்கு பரிசுப் பொருட்கள் யவழங்கப்படுவது வழக்கம். இதனால் அங்கு வண்ண பூக்கள் அதிகமாக தேவைப்படுவதால் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தோவளையில் இருக்கின்ற மிகவும் புகழ்பெற்ற மலர் சந்தைக்கு வந்து பூக்கள் வாங்கி செல்வார்கள்.

நிதியமைச்சர் பி.டி.ஆரால் இதை நிரூபிக்க முடியுமா? சவால் விட்ட சீமான்!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படாத நிலையில், தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதன் காரணமாக தோவாளை செண்பகராமன் புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் கிரேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி, சம்பங்கி போன்ற பல வண்ண மலர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருவோணப்ண்டிகையை ஒட்டி, பூ வியாபாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில் பூ விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் காத்திருப்பதாக தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி