ஆப்நகரம்

பார்சல் உணவில் புழுக்கள்: கன்னியாகுமரி ஹோட்டலுக்கு சீல்

உணவு பொட்டலத்தில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரியை சேர்ந்த உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 14 Jun 2020, 7:37 pm
கன்னியாகுமரி மாவட்டம் குமரன்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் திருவட்டார் அருகே கழுவன்திட்டை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மணக்குன்று பகுதியை சேந்த ராஜன் என்பவர் தனது குழந்தைகளுக்கு புரோட்டா மற்றும் இறைச்சி பார்சல் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று ராஜன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க உணவு பொட்டலத்தை திறந்து பார்த்தபோது, இறைச்சி கறியில் புழுக்கள் நெழிந்து கொண்டிருந்தன.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜன், திருவட்டார் உணவகத்திற்கு வந்து உரிமையாளர் வின்சென்ட் இடம் உணவு பொட்டலத்தை காட்டி நியாயம் கேட்டுள்ளார். ஆனால், மது போதையில் இருந்த உணவக உரிமையாளர், வாடிக்கையாளரை ஆபாசமாக பேசி கட்டையால் தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து, வாடிக்கையாளர் ராஜன் திருவட்டார் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்ப இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஹோட்டலுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கொரோனா: சமூக இடைவெளியின்றி நடைபெற்ற எஸ்.ஐ. திருமணம் -202 பேர் மீது வழக்குப்பதிவு!!

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களில் பேரூராட்சி ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் தூவி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று குழி தோண்டி உணவு பொருட்களை புதைத்தனர். அத்துடன், கடைக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி