ஆப்நகரம்

கனிமொழி, ஜோதிமணி பற்றி அவதூறு - நாஞ்சில் சம்பத் சகோதரர் மீது வழக்கு!

பெண் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக நாஞ்சில் சம்பத் சகோதரர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 May 2020, 3:00 pm
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்தின் மூத்த சகோதரர் ஆவார். தற்போது இலக்கியவாதியாகவும் திமுக ஆதரவாளராகவும் பேசி வருகிறார். இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் எம்.பிக்கள் கனிமொழி மற்றும் ஜோதிமணி ஆகியோரின் புகைப்படங்களுடன் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜோதீஸ் என்பவரும் கரூர் எம்.பி ஜோதிமணி பற்றி தரக்குறைவாக கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த போலீசார் ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து பத்மநாபபுரம் நகரை சேர்ந்த ஜோதீஸ் மற்றும் கருணாநிதி ஆகியோர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குமரி அருகே மதுபோதையில் தாயை கத்தியால் குத்திய மகன்..!

இதற்கிடையில் இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி