ஆப்நகரம்

கேரளாவில் மீண்டும் ஒரு படகு விபத்து - மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் படகு வீடு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் உயிருக்கு போராடிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் சுற்றுலா வாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 29 May 2023, 7:35 pm

ஹைலைட்ஸ்:

  • ஆலப்புழாவில் படகு வீடு கவிழ்ந்து விபத்து
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தண்ணீரில் தத்தளிப்பு
  • மற்றொரு படகுமூலம் குடும்பத்தினர் மீட்பு
  • இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கேரளா படகு விபத்து
கேரளா படகு விபத்து
கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் வேம்பநாட்டு ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரியில் ஏராளமான மக்கள் படகு வீடு மூலம் சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் - தீபிகா தம்பதியும் அவர்களது மகள் சாந்தியும் படகு வீடு ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஏரியின் நடுவே படகு வீட்டில் அமர்ந்திருந்த போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் படகு கவிழ்ந்ததால் படையில் இருந்த கணவன் மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட மூன்று பேரும் தண்ணீரில் தத்தளித்து உயிர் இருக்க போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு படகுமூலம் அவர்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அந்த படகு பழைய படகு எனவும் அந்த படத்தின் அடிப்பகுதியில் பழுது ஏற்பட்டு அது வழியாக தண்ணீர் நுழைந்து படகு கவிழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஆளும் அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு - ராமநாதபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் மல்லபுரம் மாவட்டம் தானூர் பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கேரளா மாநிலத்தில் படகு வீடு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி