ஆப்நகரம்

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jul 2020, 9:31 am
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 2,13,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,494 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil congress mla rajeshkumar


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கொரோனாவால் உலகம் முழுவதும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிலும் இவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்புப் பணியில் களத்தில் இறங்கி பணியாற்றுவதால் இவர்களுக்கு பாதிப்பு அதிகமாகிறது.

மருமகளுக்கு இப்படியொரு இன்ப அதிர்ச்சியா? மதுரை மாமியார் செய்ததை பாருங்கள்!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக, திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பின்ருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்குதான் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகள்களை மாடுகளாக மாற்றிய விவசாயி; டிராக்டரை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்!

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ராஜேஷ் குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி