ஆப்நகரம்

வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி தப்பி ஓடியவர் கைது

இவர் ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 29 Nov 2020, 5:35 pm
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலத்தில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கள்ளச்சாராயம் காய்ச்சியவர்


பக்கறை மதுவிலக்கு போலீசாருக்கு நட்டாலம் பகுதியில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து ஆய்வாளர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது எத்தனை அருகே ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராய மற்றும் உரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை எடுத்து வீட்டில் இருந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர் தொடர்ந்து 50 லிட்டர் கள்ளச்சாராயம் சாராய உரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் கைதான குமாரின் சொந்த ஊர் பெறாமலேயே அடுத்த என்பதும் பணியில் வீடு வாடகைக்கு எடுத்து சாராயம் காட்சி உள்ளதும் தெரியவந்தது. இவர் ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியவர் என்பதும் தெரியவந்துள்ளது. குமாரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி