கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதியான கீரிப்பாறையை அடுத்த வாழையத்துவயல் பகுதியிலிருந்து மாறாமலைக்கு கடந்த 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வாழையத்துவயல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது மகளான ஸ்ரீனா ஆகியோரை வழியறித்து காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுக்கு தேவையான உதவியை தமிழக அரசு மேற்கொள்ளும் என ஆறுதல் கூறினார். அதைதொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.