ஆப்நகரம்

சனாதன மயக்கத்தில் சீமான்; அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்.!

சனாதன மயக்கத்தில் சீமான் இருப்பதாக, அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Dec 2022, 6:54 pm

ஹைலைட்ஸ்:

  • சனாதன மயக்கத்தில் சீமான்
  • ஈ.பி.எஸ். பா.ஜ.கவின் நிழல்
  • அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil minister mano thangaraj
அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘தமிழகம் அமைதியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கைகளை ஜே.பி.நட்டா படிக்க வேண்டும்.
அதனை தெரியாமல் வட இந்தியாவையும் தமிழகத்தையும் ஒப்பிடுகிறார். சீனா இந்தியாவை ஆக்கிரமிப்பதை கடுகளவும் கவலைப்படாமல், மற்ற அரசுகளை குறைசொல்வதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும்.

பிரதமர் பேசும் போது இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் பா.ஜ.க.வினர் இலவசங்களை கூட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க.வினர் இரட்டை நாக்கோடு, இரட்டை வேடம் போடுகிறார்கள். ஈ.பி.எஸ்., பா.ஜ.கவின் நிழல். அவர் கொரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க கேட்டும் வழங்காதவர்.

கல்வி சம்பந்தமான புள்ளி விபரத்தை சீமான் படித்து கொள்ள வேண்டும். இன்று உயர்கல்விக்கான தேசிய சராசரி 27.1 சதவீதம், இன்று தமிழகத்தில் 66.6 சதவீதம். இது திராவிட ஆட்சியின் வெற்றிக்கான ஒரு காரணம். சீமான் போன்றவர்களுக்கு இது புரியாது. சனாதன மயக்கத்தில் சீமான் இருக்கிறாரா என்ற ஐயம் எழுந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட எந்த கட்டுப்பாடும் இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!

ஹிந்தியில் படித்து வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், தமிழகம் வந்து வேலை பார்க்கும் நிலை எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்கு யாரும் செல்லவில்லை. பா.ஜ.க., வட மாநிலங்களில் பல தந்திரங்களை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்களால் வேரூன்ற முடியாது’’ என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி