ஆப்நகரம்

சட்டத்தை கையில் எடுத்த சீமான் தம்பிகள்...‌ அட்வைஸ் செய்து அனுப்பிய போலீஸ்!

நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 9 Apr 2022, 12:01 pm

ஹைலைட்ஸ்:

  • நள்ளிரவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்
  • திருவனந்தபுரம் அருகே விழிஞம் பகுதியில் நடைபெறும் துறைமுக கட்டுமான பணிகள்
  • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கற்களைக் கொண்டு செல்ல நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil லாரிகளை தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சியினர்
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் கேரளாவிற்கு கற்கள் ஏற்றிச்சென்ற லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து சட்டத்தை நீங்களே கையில் எடுக்க வேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞம் பகுதியில் அமைக்கப்படும் துறைமுக கட்டுமான பணிகளுக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது.


தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கற்களைக் கொண்டு செல்ல நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நாகர்கோவில் வழியாக கற்களை ஏற்றிச் சென்ற லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தினர்.

சென்னை பட்ஜெட் 2022: என்னென்ன சிறப்பு திட்டங்கள் தெரியுமா?

இதனால் லாரி ஓட்டுநர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், கட்சியினரிடம் சட்டத்தை நீங்களே கையில் எடுக்க வேண்டாம் எனவும், உங்கள் குற்றச்சாட்டுகளை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுரை வழங்கி, அவர்களை கலைந்து செல்ல வைத்துள்ளனர். பின்னர் லாரிகளை கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி