ஆப்நகரம்

தானாகச் சாலையில் விழுந்து பலியான குமரி இளைஞர்: அதிர்ச்சி சிசிடிவி!

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே அதி வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2021, 4:46 pm
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர். வெளிநாட்டில் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபினேஷ்ராஜ். வயது 22.
Samayam Tamil தானாகச் சாலையில் விழுந்து பலியான குமரி இளைஞர்: அதிர்ச்சி சிசிடிவி!


அபினேஷ்ராஜ் கலை கல்லூரியில் பட்ட படிப்பை முடித்து தற்போது பெங்களூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறை எடுத்து வீடு திரும்பிய அவர் நேற்று மாலை பக்கத்து வீட்டு நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து அபினேஷ்ராஜ் வாகனத்துடன் சரிந்து சாலையில் தலைகுப்பற விழுந்தார். இந்த விபத்து காரணமாக அபினேஷ்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குமரி போலீஸ் பெயரில் பேஸ்புக் கணக்கு: மக்களை மிரட்டி பணம் பறிப்பு!

இது குறித்துத் தகவலறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபினேஷ்ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி