ஆப்நகரம்

சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்கு 8 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம்!

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தில் தற்காலிக பால்வெட்டும் தொழிலாலியாக இருந்து ஓய்வுபெற்ற பேச்சுப்பாறையில் தன் வீட்டு அருகே 17 வயது மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்குத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2021, 10:05 pm
நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த கன்னியாகுமரி மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூபாய் 5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்கு 8 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம்!


கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையைச் சேர்ந்தவர் கேசவன். இவர் அரசு ரப்பர் கழகத்தில் தற்காலிக பால்வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஓய்வு காலத்தில் வீட்டிலிருந்தபோது 2016ஆம் ஆண்டு அவரது வீட்டருகே உள்ள கூலித் தொழிலாளியின் மகள், 17 வயது மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி!

இந்த சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பிட்ட வழக்கு நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரணை செய்த போக்சோ நீதிபதி எழில் வேலன் குற்றம் சாட்டப்பட்ட கேசவனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ5 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

அடுத்த செய்தி