ஆப்நகரம்

நாகர்கோவிலுக்கு புதிய ரயில் சேவை...எங்கிருந்து வருதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

நாகர்கோவிலுக்கு புதிய ரயில் சேவையாக பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எங்கிருந்து வருதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! இந்த ரயில் சேவை குறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 5 Jun 2023, 6:44 pm

ஹைலைட்ஸ்:

  • நாகர்கோவிலுக்கு புதிய ரயில் சேவை
  • பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
  • எங்கிருந்து வருதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
  • தெற்கு ரயில்வே அறிவிப்பு
  • மக்கள் மகிழ்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Train-News.
Nagercoil
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நாகர்கோவில்-பனாரஸ்
நாகர்கோவிலில் இருந்து பனாரஸ் வரை செல்லும் பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ்(06911) நாளை புறப்பட உள்ளது. இந்த ரயிலானது நாகர்கோவிலில் இருந்து 06-06-2023 அதாவது நாளை 11 மணிக்கு கிளம்பி 7-வது நாளில் பனாரஸ் சென்றடைகிறது.
பனாரஸ்- நாகர்கோவில்
அதேபோல் பனாரசிலிருந்து 06912 என்ற பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயிலானது 13-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டு 4-வது நாளில் நாகர்கோவில் வந்தடைகிறது.

விஜயவாடா, கொல்கட்டா
வண்டி எண் 06911 நாகர்கோவிலில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் 06-06-2023 அன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா, அரக்கோணம். புவனேஸ்வர், கொல்கட்டா, கயா வழியாக சென்று 12-06-2023 அன்று காலை 4 மணி 25 நிமிடங்களுக்கு பனாரசை சென்றடைகிறது.

பிரயாக்ராஜ், நாக்பூர்
அதேபோல் வண்டி எண் 06912 பனாரசில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்பி பிரயாக்ராஜ், நாக்பூர், வாராங்கல், விஜயவாடா, அரக்கோணம், சேலம், ஈரோடு, பாலக்காடு, திரிச்சூர், எர்னாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு அதிகாலை 12 மணி 45 நிமிடங்களுக்கு வந்து சேரும்.
மீண்டும்...மீண்டுமா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு...நெல்லை மாணவர்கள் குஷி
ரயில் பெட்டிகள்
இந்த ரயிலில் 2 ஏசி 2 டயர் வகுப்புகள், 7 3 டயர் வகுப்புகள், 3 ஸ்லீப்பர் கோச்சுகள், 1 பான்ட்ரீ, 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி