ஆப்நகரம்

ஒக்கி புயலின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்... கடல் வீரர் தினமாக அனுசரிப்பு

இலங்கை அரசு மீனவர்களுக்கு வழங்குவது போல் ரேடியோ போன் வழங்க வேண்டுமெனவும் கடல் ஆம்புலன்ஸ் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை

Samayam Tamil 29 Nov 2020, 10:35 pm
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஓக்கி புயலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் கடல் வீரர் தினமாக அறுசரிப்பு குழந்தைகள் முதல் பெரியோர் வரை மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்
Samayam Tamil cyclone


கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய தோடு 172 மீனவர்களை பலிகொண்ட ஓக்கி புயலின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ஒக்கி புயலில் கடலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓக்கியில் உயிரிழந்த 172 மீனவர்களின் படங்களுக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான மீனவ மக்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு மெழுகுவர்த்தி ஜெயந்தி மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து தங்களது வாழ்வாதாரமான கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

இந்நிகழ்ச்சி தொடர்பாக மீனவர்கள் கூறுகையில் தங்களது வாழ்வாதாரமான கடல் அன்னை ஓக்கியின் வடிவில் சீறிய போது நீண்ட நேரம் தங்கள் மீனவர்கள் அதை எதிர்கொண்டு போராடியும் இறுதியில் கடலில் மடிந்ததால் அந்த மீனவர்களை கடல் வீரர்கள் என ஏற்றுக்கொண்டு இந்த நாளில் நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்தனர்.

மேலும் வருங்காலங்களில் ஓக்கி போன்ற புயலில் இருந்து தப்பிப்பதற்காக கரையிலிருந்து உடனுக்குடன் தகவல் கிடைக்கும் வகையில் இலங்கை அரசு மீனவர்களுக்கு வழங்குவது போல் ரேடியோ போன் வழங்க வேண்டுமெனவும் கடல் ஆம்புலன்ஸ் அமைக்க வேண்டும் எனவும் அதிக அளவில் ஆழ்கடல் மீனவர்களை கொண்ட குளச்சல் பகுதியில் தகவல் தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன் வைத்தனர்

அடுத்த செய்தி