ஆப்நகரம்

பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு... சுற்றுலாப் பயணிகள் வருகை

7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கபட்டது. இதன் விளைவாக இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபப்டுகின்றனர்.

Samayam Tamil 3 Nov 2020, 2:54 pm
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கபட்டுள்ளது.
Samayam Tamil பத்மநாபபுரம் அரண்மனை


கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. அதையொட்டி, கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் கடந்த மார்ச் 13ம் தேதி மூடப்பட்டது. அதன்பிறகு ஏழு மாதங்களாக அரண்மனை மூடப்பட்டு இருந்ததால் பத்மநாபபுரம் பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொடர்பான அச்சம் குறைந்து சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல துவங்கியுள்ள நிலையில், பத்மநாபபுரம் அரண்மனை திறக்கும் நாளை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் கேரளா அரசின் உத்தரவு படி கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கபட்டது. இதன் விளைவாக இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபப்டுகின்றனர்.



அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை செய்த பின்னர், மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளும் வர தொடங்கி உள்ளதால் அப்பகுதி வியாபாரிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி