ஆப்நகரம்

கேஸ் போட்டாலும் ரோட்லதான் சுற்றுவோம்: குமரி போலீஸ் ஆயிரமாயிரம் வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா முழு ஊரடங்கைப் பற்றிக் கவலைப்படாமல் சுற்றித்திரியும் வாகன ஒட்டிகளால் போலீசார் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Samayam Tamil 19 May 2021, 4:38 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் இ-பதிவு இல்லாமல் இந்த தீவிர ஊரடங்கு காலத்தில் பயணம் செய்து ஆயிரக்கணக்கானோர் போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கி வருகின்றனர்.
Samayam Tamil ரோட்டில்தான் சுற்றுவோம்: தினமும் ஆயிரம் பேர் மீது குமரி போலீஸ் வழக்கு!


கொரானா முழு ஊரடங்கு காரணமாக இ-பதிவு இல்லாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொதுமக்கள் செல்லக் கூடாது என்ற தடை உத்தரவு அமலில் உள்ளது.

இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் சோதனை தீவிரமடைவது ஒருபுறமென்றாலும் இ-பதிவு இல்லாமல் வருபவர்களின் எண்ணிக்கையும் மற்றொருபுறம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

கடலலையில் மிதந்து வந்த அம்மன் சிலை... குமரியில் பக்தி பரவசம்!

இதனைக் கட்டுப்படுத்த தற்போது நாகர்கோவில் நகரப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் அல்லது அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.

விதிகளை மீறி ஊர் சுற்றும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் இது போன்று தேவை இன்றி ஊர் சுற்ற அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்த செய்தி