ஆப்நகரம்

என்னமா பிளான் பண்ணி பண்றாங்கய்யா.. ராகவேந்திரர் கோவிலில் 1 லட்சம் கொள்ளை.. மாட்டாமல் இருக்க சிசிடிவியும் அபேஸ்!

சுசீந்திரம் பிருந்தாவன ராகவேந்திரர் கோவிலில் உண்டியலை உடைத்து ஒரு லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 Aug 2022, 2:25 pm

ஹைலைட்ஸ்:

  • கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் நான்கு வழிச் சாலையில் உள்ள பிருந்தாவன ராகவேந்திரர் கோவிலில் திருடர்கள் கைவரிசை
  • உண்டியல் பணம் 1லட்சம் கொள்ளை
  • சிசிடிவியின் வீடியோ ரெகார்டையும் திருடி சென்ற மர்ம கும்பல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ராகவேந்திரர் கோவிலில் 1 லட்சம் கொள்ளை
கன்னியாகுமரி அடுத்த சுசீந்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது பிருந்தாவன ராகவேந்திரர் கோவில். இக்கோயிலில் தினசரி பூஜைகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் மந்திராலயா ராகவேந்திரா கோவிலின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக தர்மகர்த்தா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து போலீசார் சம்பவம் இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ 1 லட்சம் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.

3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் சிக்கிய ஆசாமிகள்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

மேலும் போலீசாரிடம் மாட்டி விடக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவில் காட்சி பதிவு பெட்டகத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கோவில் உண்டியலில் கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல் போலீசிடம் இருந்து தப்பிக்க சிசிடிவி ரெகார்டையும் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி