ஆப்நகரம்

கொரோனா: சமூக இடைவெளியின்றி நடைபெற்ற எஸ்.ஐ. திருமணம் -202 பேர் மீது வழக்குப்பதிவு!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, காவல் துறை உதவி ஆய்வாளருக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2020, 11:19 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல தர்மபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வலத்தி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை சுயம்பு ஓய்வுபெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்தவர்.
Samayam Tamil si marriage


இந்நிலையில் மணமக்கள் கார்த்திக்- சண்முகப்பிரியா இவர்களது திருமணம் இருளப்பபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கொரோனா தடை உத்தரவு காலமென்பதால் மண்டபங்களில் திருமணம் நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், இந்த திருமண வைபவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதிகளில் உள்ளவர்கள் நாகர்கோவில் ஆர்டிஓக்கு புகார் அளித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதுடன் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

இளம்பெண்ணுக்கு டாட்டா காட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை..! குமரி பெண் சோகம்...

இதேபோன்று, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார், 202 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பதவி செல்வாக்குடன் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடப்பதால் கொரோனா அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் குமுறலுடன் தெரிவிக்கின்றனர்.

பஸ் வருமா வராதா? கன்னியாகுமரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறை அதிகாரியே அரசின் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துடன், கோட்டார் போலீசார் முதற்கட்டமாக 202 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி