ஆப்நகரம்

ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டிகள்.. வச்சு செய்த போலீஸ்.. குவியும் பாராட்டுகள்!

கன்னியாகுமரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களை போக்குவரத்து விதிகளை மீற மாட்டேன் என போக்குவரத்து போலீசார் உறுதிமொழி ஏற்க வைத்த டிராபிக் போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 May 2022, 6:56 pm

ஹைலைட்ஸ்:

  • போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம், குடித்து விட்டு வாகனம் ஓட்ட மாட்டோம் என உறுதிமொழி
  • ஹெல்மட் அணியாமல் வந்தவர்களை கவனித்த டிராபிக் போலீசார்
  • பொதுமக்கள் பாராட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம், குடித்து விட்டு வாகனம் ஓட்ட மாட்டோம் என ஹெல்மட் அணியாமல் வந்தவர்களை உறுதி மொழி ஏற்க வைத்த போக்குவரத்து போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, முக்கிய சாலைகளில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் ஹெல்மட் அணியாமல் வருவோர் மற்றும் ஒரே வாகனத்தில் மூன்று பேராக வருவோர் உள்ளிட்ட சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.சில பகுதிகளில் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர்.

ஒன்வேயில் போன மினி பஸ்... டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து.. பயணிகளின் நிலை என்ன ?

இந்நிலையில், இன்று கோட்டார் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வந்த நபர்களை அழைத்து ஒவ்வொருவரையும் சாலை பாதுகாப்பு விதிகளை கூறுமாறு அறிவுறுத்தினர். பின்னர், சாலை பாதுகாப்பு விதிகளை மீற மாட்டேன் என உறுதிமொழி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினர். சாலை விதிகளை மீறியவர்களை, தங்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்க செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே போலீசாருக்கு மிகுந்த பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி