கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாகவே வீடு புகுந்து கொள்ளை, கோயில் உண்டியல் கொள்ளை, வழிப்பறி கொள்ளை என குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது நாகர்கோவிலில் அதைப் போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பர்தா கும்பல்
நாகர்கோவில் இடலக்குடி அருகே வேதநகர் பகுதியில் வசித்து வருபவர் உமர் பாபு (53). மனைவியும் அப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் எட்டு மணி அளவில் தனியாக இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றதால் அவர் தனியாக வீட்டில் இருந்த நிலையில் திடீரென உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது போல பர்தா அணிந்து கொண்டு 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உமர் பாபு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அவர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து உமர் பாபுவை கயிற்றால் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த இருபது பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அந்த சமயம் பார்த்து உமர் பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென வந்து விட்டதால் கொள்ளையர்கள் என அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தான் கொண்டு வந்த அரிவாள், துப்பாக்கி, டார்ச் லைட் போன்றவற்றை அப்படியே போட்டுவிட்டு நகைகளுடன் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் சொல்லி அடிக்க காரில் வந்த நிலையில் மீண்டும் அதே காரில் ஏறி தப்ப முயன்ற போது கார் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
அதனால் அவர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் கூடிய நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: பறக்கும் ரயில் சேவை நிறுத்தம் - அதிகாரப்பூர்வ தகவல்
காவல் துறையினர் விசாரணை
தொடர்ந்து அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றி வந்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை கோட்டார் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த கொள்ளை கும்பல் என்று வேறொரு வீட்டில் காரில் வந்து இறங்கி உள்ளே சென்ற சிசிடிவி காட்சிகள் காவல்துறையினரிடம் முக்கிய உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இடலக்குடி அருகே வேதநகர் பகுதியில் வசித்து வருபவர் உமர் பாபு (53). மனைவியும் அப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் எட்டு மணி அளவில் தனியாக இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றதால் அவர் தனியாக வீட்டில் இருந்த நிலையில் திடீரென உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது போல பர்தா அணிந்து கொண்டு 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உமர் பாபு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அவர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து உமர் பாபுவை கயிற்றால் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த இருபது பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அந்த சமயம் பார்த்து உமர் பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென வந்து விட்டதால் கொள்ளையர்கள் என அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தான் கொண்டு வந்த அரிவாள், துப்பாக்கி, டார்ச் லைட் போன்றவற்றை அப்படியே போட்டுவிட்டு நகைகளுடன் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் சொல்லி அடிக்க காரில் வந்த நிலையில் மீண்டும் அதே காரில் ஏறி தப்ப முயன்ற போது கார் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
அதனால் அவர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் கூடிய நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: பறக்கும் ரயில் சேவை நிறுத்தம் - அதிகாரப்பூர்வ தகவல்
காவல் துறையினர் விசாரணை
தொடர்ந்து அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றி வந்ததால் அவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை கோட்டார் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த கொள்ளை கும்பல் என்று வேறொரு வீட்டில் காரில் வந்து இறங்கி உள்ளே சென்ற சிசிடிவி காட்சிகள் காவல்துறையினரிடம் முக்கிய உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.