ஆப்நகரம்

கடையடைப்பு போராட்டம்: வெறிச்சோடிய கன்னியாகுமரி

தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கடையடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது

Samayam Tamil 26 Jun 2020, 6:17 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பெண்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, உயிரிழந்த தந்தை-மகன் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலைகள் வழங்கி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் வனிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மருந்து வனிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து மருந்து கடைகள் 4 மணி நேரம் அடைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஓட்டுநருக்கு கொரோனா: முடக்கப்பட்ட தபால் நிலையம், குடியிருப்பு

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் மளிகை கடைகள், உணவகங்கள் மருந்துக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுதவிர, மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

அடுத்த செய்தி