ஆப்நகரம்

வந்தது திடீர் உத்தரவு; பள்ளி ஆசிரியர்கள் ஷாக்!

தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 24 Jan 2022, 3:52 pm
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல், 3வது அலையாக வீசி வருகின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Samayam Tamil பள்ளி ஆசிரியர்கள்
பள்ளி ஆசிரியர்கள்



அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 19வது மெகா தடுப்பூசி முகாம் 528 இடங்களில் நடந்தது.

உடைந்து போன உதயநிதி ஸ்டாலின்; வெற்றி தேடி தந்த தொண்டர் மறைவு!

இந்த முகாமில் பொறுப்பாளர்களாக பணியில் இருக்க வேண்டிய அலுவலர்களின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மூலமாக தயாரிக்கப்பட்டு அரசு பணியில் இருக்கும் அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டது. அந்த பட்டியலில் பெயர் இருப்பவர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும் முகாமிற்கு பணிக்கு செல்ல வேண்டும். இது தான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் திருவட்டார், பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு நடுநிலை பள்ளியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தவர் பெயரை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வாண்டடா வண்டி ஏறிய ஜெயக்குமார்; வச்சி செய்ய..காத்திருக்கும் போலீசார்?

அதாவது திருவட்டார் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்து வந்த தமிழ் ஆசிரியர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதியே இறந்துவிட்டார். அந்த ஆசிரியர் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்க வேண்டும் என்று, அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை தடுப்பூசி முகாம் தொடங்கியபோது, சுகாதார துறையினர் அங்கு வந்தனர். அங்கு பணியில் இருக்க வேண்டிய ஆசிரியர் இல்லாததை அறிந்து விசாரித்தனர். அப்போது தான் தமிழ் ஆசிரியர் இறந்தது தெரிய வந்தது.

விடுதலை சிறுத்தைகள் இலக்கு; திமுகவுக்கு ஷாக் தந்த திருமா!

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஊழியர் பணியில் அமர்த்தப்பட்டார். மேலும், இதுபோன்ற தவறு யாருடைய கவனக்குறைவால் நடந்தது? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ஆசிரியர் ஒருவருக்கு தடுப்பூசி முகாமில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டதை அறிந்து, சக ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி