ஆப்நகரம்

குமரியில் கொரோனாவை விரட்ட நீதிபதி தலைமையில் மாஸ் முகாம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிபதிகள் பங்கேற்று கொரோனா சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2021, 11:39 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் கொரோனா வரும் முன் காப்போம் நிகழ்ச்சியின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கமும் அரசு ஆயுர்வேத கல்லூரி நிர்வாகமும் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் மூலமாக இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் பெற்றனர்.
Samayam Tamil குமரியில் கொரோனாவை விரட்ட நீதிபதி தலைமையில் மாஸ் முகாம்!


கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கமும் கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இணைந்து கொரோனா வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இன்று இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி!

மாவட்ட நீதிபதி அருள் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்படப் பலர் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்கியதோடு அவர்களுக்கு இலவசமாக ஆயுர்வேத மருந்துகளையும் வழங்கினார். இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலன் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி