ஆப்நகரம்

மாணவி தற்கொலை.. வெளியானது பகீர் பின்னணி!

கல்லூரி மாணவி தற்கொலையில் பகீர் கிளப்பும் பின்னணி தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 18 Jan 2022, 11:00 am
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (19). மார்த்தாண்டம் தனியார் கல்வி நிறுவனத்தில் பென்சி டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வந்தார்.
Samayam Tamil பென்சி
பென்சி



பென்சி படித்து வரும் கல்வி நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் கட்டணம் பாக்கி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனம் உடனே செலுத்துமாறு பென்சியிடம் கூறி வந்துள்ளது.

ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு?

வீட்டு ஏழ்மை சூழ்நிலை காரணமாக கல்வி கட்டணத்தை பென்சியால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பென்சி யாரிடமும் பேசாமல் மனம் உடைந்து காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தினருடன் பென்சி பேசிக் கொண்டு இருந்தார். அதன் பிறகு தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுவிட்டார்.

நிர்வாணப்படுத்தி ரசித்த போலீசார்?; சட்ட கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு!

பொதுவாக அதிகாலையிலேயே தூங்கி எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டி பென்சியை எழுப்பினர்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது பென்சி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

தமிழகத்தில் அனுமதி இல்லை; போலீசார் அதிரடி நடவடிக்கை!

இதையடுத்து களியக்காவிளை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பென்சி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி