ஆப்நகரம்

8ம் வகுப்பு மாணவர்கள் ஹேப்பி; அடிக்கப் போகும் ஜாக்பாட் பரிசு!

பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட் பரிசு பெற்றோர்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளது.

Samayam Tamil 5 Mar 2022, 11:00 pm
அரசு உதவி பெரும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பு வரை என 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது.
Samayam Tamil பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்



இதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை 5539 மாணவ, மாணவிகள் எழுதினர்.

கட்சி கட்டுப்பாடு மீறிய ஓபிஎஸ்; எடப்பாடி போடும் அந்த உத்தரவு!
அதேபோல் நாகர்கோவில் பெண்கள் பள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி ஆகிய பள்ளிகளிலும் தேசிய வருவாய்வழி கல்வி உதவித்தொகை தேர்வு நடந்தது. இந்த தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவு பெற்றது.

இந்த தேர்வு எழுத மொத்தம் 5618 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் 5539 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 79 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வந்து இருந்தனர்.

அரசு பணியாளர் தேர்வாணையம் அதிரடி; தேர்வர்கள் அதிர்ச்சி!
இந்த தேர்வில் வெற்றி பெற்றால் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்பதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உற்சாகம் களைகட்டி இருந்தது.

அடுத்த செய்தி