ஆப்நகரம்

கவர்னர் எடுத்த திடீர் முடிவு; குடும்பத்தினர் செம ஹேப்பி!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எடுத்த திடீர் முடிவு அவரது குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Samayam Tamil 24 Nov 2021, 3:50 pm
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக இன்று குமரி மாவட்டம் வந்தடைந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை மாவட்ட கலெக்டர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி.அன்பு, டி.ஐ.ஜி.பிரவின்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
Samayam Tamil போலீஸ் மரியாதையை ஏற்கும் ஆளுநர்
போலீஸ் மரியாதையை ஏற்கும் ஆளுநர்


பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மாலை 4 மணிக்கு படகு சவாரி மூலம் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று தியானம் செய்கிறார்.


இதனை தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகம் சென்று விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடும் அவர் அங்கிருந்து ராமாயண தரிசன கூடத்தை பார்வையிடுகிறார்.

தொடர்ந்து நாளை அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்து, பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மனை குடும்பத்துடன் தரிசனம் செய்கிறார். கவர்னர் வருகையை ஒட்டி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரை 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில்களில் பூஜை; தமிழக அமைச்சர் பரபரப்பு முடிவு!

கன்னியாகுமரிக்கு வருகை தரும் கவர்னர் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளதை அறிந்ததும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி