ஆப்நகரம்

கணவன் போடும் சூப்பர் திட்டம்; கலெக்டரிடம் இளம்பெண் புகார்!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். இளம்பெண் அளித்த புகாரை பார்த்ததும் மாவட்ட கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

Samayam Tamil 26 Oct 2021, 11:21 am
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மலையடி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஸ்ரீஜா. அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 28 வயதான மனோஜ் என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
Samayam Tamil மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


தற்போது, நான்கரை வயதில் ஷானி மற்றும் மூன்றரை வயதில் ஷாலினி, இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணம் முடிந்த ஆறாவது மாதத்தில் இருந்து கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

கணவரின் தாயார், தந்தை, தந்தையின் தாயார் ஆகியோர் ஸ்ரீஜாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மது குடிக்கும் பழக்கம் கொண்ட மனோஜ் அவ்வபோது மனைவியை தாக்கியதாகவும் தெரிகிறது.

நாட்கள் செல்லச் செல்ல மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவு, உடை உள்ளிட்ட எந்த ஏற்பாடும் செய்யாத நிலையில், நேற்று ஸ்ரீஜாவை சரமாரியாக மனோஜ் தாக்கியதோடு குழந்தைகளை தன் வசம் வைத்துவிட்டு ஸ்ரீஜாவை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து சிஜா பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு; கல்வி அமைச்சர் புதிய தகவல்!

அப்போது அவர் கூறுகையில், கணவரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக இரண்டு முறை தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறியதோடு, தற்போது தன்னை கணவர் கொலை செய்துவிட்டு மற்றொரு திருமணம் செய்ய மேற்கொள்ள உள்ளதாகவும் கூறி தனக்கு குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி