ஆப்நகரம்

மயில் வேட்டை: மூவர் கைது, ஆறு துப்பாக்கிகள் பறிமுதல்!!

கேரளாவில் மயில் வேட்டையாடிய நபர்களை கைது செய்துள்ள வனத் துறையினர் அவர்களிடமிருந்து 6 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Jun 2020, 9:42 pm
கேரளாவில் கர்ப்பிணி யானை இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த மாநிலத்தின் வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil peacock


இந்த நிலையில், தமிழக -கேரள எல்லைப் பகுதியில் தென்மலை அருகே ராக் உட் என்ற எஸ்டேட் மற்றும் வனப்பகுதி இணைந்த இடத்தில், எஸ்டேட் மானேஜர் உட்பட சிலர், அங்கு சிறிய செட் ஒன்றில் மயில்களை வேட்டையாடி சமைக்க முற்பட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்து, அங்கு சென்ற வனத்துறையினர் சேனா ஜேம்ஸ், சிஜோ ஜாய், ஷாஜி ஆகியோரை கைது செய்தனர். செந்துருனி வனவிலங்கு வார்டன் பி.சஜீவ் குமார், ரேஞ்ச் அதிகாரி சஜூட்ஸ் ஆகியோர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நாகர்கோயிலில் சுழற்றி அடித்த மழை!

பின்னர் அவர்களிடம் இருந்து 3 மார்டன் துப்பாக்கி, 2 லைசன்ஸ் உள்ள துப்பாக்கி, ஒரு ஏர்கன் என மொத்தம் 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

அடுத்த செய்தி