ஆப்நகரம்

கன்னியாகுமரியில் புலி, யானை எத்தனை இருக்கு தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது.

Samayam Tamil 1 Mar 2021, 12:19 pm
இதில் சிறுத்தைப் புலி மற்றும் யானை காட்டுமாடு, காட்டுப்பன்றி, கரடி, மலபார் அணில், மிளா, உடும்பு, முள்ளம்பன்றி, செந்நாய், எரும்பத்தின்னி, கருமந்தி, வரையாடு, கேளையாடு, மரநாய், காட்டு முயல், போன்றவை கண்டறியப்பட்டன.
Samayam Tamil கன்னியாகுமரியில் புலி, யானை எத்தனை இருக்கு தெரியுமா?


கன்னியாகுமரி மாவட்டம் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பூதப்பாண்டி, அழகியபண்டியபுரம், வேளிமலை, களியல், குலசேகரம் ஆகிய ஐந்து வனச்சரகங்களில் 2021ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்கெடுப்பு 25ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பின்போது யானைகள், காட்டுமாடு, காட்டுப்பன்றி, கரடி, மலபார் அணில், மிளா, உடும்பு, முள்ளம்பன்றி,செந்நாய், எரும்பத்தின்னி, கருமந்தி, வரையாடு, கேளையாடு, மரநாய், காட்டுமுயல், காட்டுக்கோழி ஆகிய வனவிலங்குகளை ஆய்வுக்குச் சென்றவர்கள் நேரில் கண்டுள்ளனர்.

பெண்களின் சபரிமலையில் தொடங்கியது மாசிக் கொடை திருவிழா!

அதேபோல் புலி, சிறுத்தைகள் போன்ற மாமிச உன்னிகளின் எச்சம் கண்டறியப்பட்டுள்ளது. 26 குழுக்களாகப் பிரிந்து சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கிடைத்துள்ள விபரங்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் தெரியவரும் எனத் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணியானது வன உயிரின சரணாலய மேம்பாட்டுக்கு உதவியாக இருந்தது என வனத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி