ஆப்நகரம்

கன்னியாகுமரி: கரை ஒதுங்கிய இளைஞர் உடல்.. கதறி அழுத தாய்

ஆன்றோ பெர்லின் என்ற 18 வயதான பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு படிக்கும் தனது மகனை காணவில்லை என புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

Samayam Tamil 11 Jul 2020, 2:54 pm
தென்தாமரைகுளம் அருகே முகிலன்குடியிருப்பு கடற்கரையில் பாலிடெக்னிக் மாணவர் பிணம் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியிலுள்ள முகிலன் குடியிருப்பு கடற்கரையில் நேற்று மாலை சுமார் 20 வயது மதிக்கத்தக்கவுள்ள வாலிபரது பிணம் கரை ஒதுங்கி கிடப்பதாக தென்தாமரைகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின்பேரில் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் சடலத்தை மீட்டு இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதிபுரம் தளவாய்புரத்தை சேர்ந்த ஜான்சி அன்னம்மா என்பவர் ஆன்றோ பெர்லின் என்ற 18 வயதான பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு படிக்கும் தனது மகனை காணவில்லை என புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஜான்சி அன்னம்மா கூறிய அடையாளங்களை வைத்து இறந்தது அவரது மகன் ஆன்றோ பெர்லின் என்பது உறுதியானது. இதனையடுத்து ஆன்றோ பெர்லின் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலிசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிடெக்னிக் மாணவர் ஒருவரின் சடலம் இறந்தநிலையில் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி