ஆப்நகரம்

இடிந்து விழுந்த வீடு... 2 வயது குழந்தை உட்பட மூவர் பலி

நாமக்கல் அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்தில், 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Mar 2021, 10:08 pm
நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அருகே கணக்கம் தோட்டத்தில் இன்று சின்னதம்பி என்பவர் தனது பழைய வீட்டின் மண் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
Samayam Tamil இறந்த குழந்தை


அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் சின்னதம்பி (63) மேலும் சுவர் இடிக்கும் பணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருகே வசிக்கும் பூங்கொடி(55), இவரது பேத்தி தேவஸ்ரீ(2) ஆகிய மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நல்லிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 வயது குழந்தை உட்பட மூவர் இப்படி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் உருவாக்கி உள்ளது.

அடுத்த செய்தி