அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கரூரில் அமைச்சரின் சகோதரர் அசோக் மற்றும் அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மீதும், அவர்களின் கார் மீது திமுகவினர் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
ஐடி ரெய்டு - தாக்குதல்
காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். பாஜகவினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
போலீசார் நடவடிக்கை
திமுகவினரின் தாக்குதலில் சேதமடைந்த கார்கரூர் நகர காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று திமுகவினர் மீது கரூர் நகர போலீசார் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய திமுகவை சேர்ந்த 6 பேர் உட்பட 8 பேரை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைது செய்தனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐடி ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐடி ரெய்டு - தாக்குதல்
காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். பாஜகவினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
போலீசார் நடவடிக்கை
திமுகவினரின் தாக்குதலில் சேதமடைந்த கார்கரூர் நகர காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று திமுகவினர் மீது கரூர் நகர போலீசார் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய திமுகவை சேர்ந்த 6 பேர் உட்பட 8 பேரை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைது செய்தனர். மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐடி ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.