ஆப்நகரம்

விற்கும் முன் ‘விளையாட்டு’காட்டிய கார்; திடீர் தீயால் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி!

கரூர் அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 26 Jul 2021, 11:09 pm
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள மேலமுத்துடையான்பட்டி வெள்ளனூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நவநீதன் (29). இவர், தனக்கு சொந்தமான காரை விற்பனை செய்ய விரும்பினார்.
Samayam Tamil a car running near karur caught fire
விற்கும் முன் ‘விளையாட்டு’காட்டிய கார்; திடீர் தீயால் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி!


அதற்காக திருச்சி உறையூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அண்ணாமலை நகரில் உள்ள பழைய கார் விற்பனை செய்யும் டீலர் அலுவலகத்திற்கு நேற்று காரை நவநீதன் ஓட்டி வந்தார்.

அப்போது அங்கு காரை வாங்க சிலர் வந்தனர். நவநீதன் கொண்டு வந்த கார் நல்ல முறையில் ஓடுகிறதா? என பரிசோதிக்க விரும்பினர். அதைத்தொடர்ந்து காரை, சோதனை ஓட்டமாக கொண்டு சென்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் திருச்சி-கரூர் பை-பாஸ் சாலையில் ரயில்வே பாலம் அருகில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காருக்குள் இருந்து கரும்புகை வந்தது.

கனிம வளத்துறையில் பெரிய கொள்ளை; தூசு தட்டுகிறார் அமைச்சர் துரைமுருகன்?

உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பாக திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், வாகனத்தில் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த தீவிபத்து காரணமாக கரூர் பைபாஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதோடு கடுமையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த செய்தி