ஆப்நகரம்

ஓடும் ஆம்புலன்ஸ்சில் குவா...குவா...

ஓடும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஓடும் ஆம்புலன்ஸ்சில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவமனையில் பலரும் தாய், சேய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Samayam Tamil 11 May 2021, 5:15 pm
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கணேசபுரத்தை சேர்ந்தவர் வடிவேலன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மீனா (24). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 4வது முறையாக மீனா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
Samayam Tamil குழந்தையுடன் மருத்துவ பணியாளர்கள்
குழந்தையுடன் மருத்துவ பணியாளர்கள்


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் மீனா ஏற்றப்பட்டு வலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது மீனாவிற்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

பெயருக்கு தான்‘வெற்றி’லை; தோல்வி தழுவிய விவசாயிகள்!

பின்னர் மருத்துவ உதவியாளர் ரம்யா, மீனாவிற்கு பிரசவம் பார்த்தார். அப்போது மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஓடும் ஆம்புலன்ஸ்சில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் தாய், சேய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த செய்தி