ஆப்நகரம்

தபால் வாக்கு குளறுபடி; அமைச்சர், செந்தில்பாலாஜி மோதல்?

கரூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Samayam Tamil 2 May 2021, 1:46 pm
கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை கரூர் அடுத்த தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி
எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி


இதில் தபால் வாக்குகள் எண்ணும்போது தபால் வாக்குகள் சீல் வைக்காமல் அப்படியே போடப்பட்டுள்ளதாகவும், தபால் வாக்குகளில் பதிவு செய்த நாள் ஒரு தேதியாகவும், கையெழுத்து போட்ட நாள் வேறு ஒரு தேதியாகவும் புகார் எழுந்தது.

சிறுத்தை; பதுங்குமா? பாயுமா?

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. ஒரு புறமும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர் விஜயபாஸ்கர், மறுபுறம் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி நிற்க அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்