ஆப்நகரம்

அரசு வேலை கேட்கும் அங்கன்வாடி ஊழியர்கள்... 2ஆவது நாளாக ஒப்பாரி போராட்டம்

2-வது நாளாக நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து ஒப்பாரி வைத்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

Samayam Tamil 23 Feb 2021, 3:57 pm
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து ஒப்பாரி வைத்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
Samayam Tamil ஒப்பாரி போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 5ல்200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, சாலையிலேயே படுத்து தங்களது கோரிக்கைகளை ஒப்பாரி மூலம் எடுத்து சொல்லி முழக்கமிட்டனர்.

ஏர்போர்ட்டில் வீல் சேரில் வந்த பிரபல நடிகர்: ரசிகர்கள் கவலை

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் மறியல் ஈடுபட்டனர். இவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அடுத்த செய்தி