கரூர் நகரில், கரூர்காவல் நிலையம், கரூர்மாநகராட்சி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கும், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்மத்தியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சிலை மார்பளவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 1991 ம் ஆண்டு, கரூர் நகர திமுக சார்பில் அமைக்கப்பட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்தப் பகுதி தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் நிறைந்த பகுதியும் கூட இரவு நேரத்தில், பிரியாணி கடைகளும் இயங்கி வருகின்றன.தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் இப்பகுதியில் கரும்புகள், மஞ்சள் மற்றும் காப்பு கட்ட தேவையான பூலப்பூ, ஆவாரம் பூ, வேப்ப இலை போன்றவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று காலையிலேயே அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு இடது மற்றும் வலது புறங்களில் காப்பு கட்டுவதற்கு அடையாளமாக பூலப்பூ, ஆவாரம் பூ, வேப்ப இலை கொண்ட கட்டுகளை வைத்தும், பீடத்தின் இரு பக்கத்திலும் செங்கரும்பை மர்ம நபர்கள் தோகையுடன் வைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பலரும் இவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற நிலையில், இது தொடர்பாக அருகில் உள்ள கரூர் நகர காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த ஒரு போலீசார் அவற்றை தனது செல்போனில் படம் எடுத்தனர்.
பின்பு அருகில் இருந்த தள்ளுவண்டி வியாபாரி சிலையில் இருந்த கரும்பு மற்றும் காப்பு கட்டியிருந்ததை அப்புறப்படுத்தி
சாலையோரத்தில் கிடத்தினார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இன்று அனைத்து வீடுகளிலும் காப்பு கட்டுதலுடன் தொடங்கும், அதன் ஒரு பகுதியாக அண்ணாவின் மார்பளவு சிலைக்கு மர்மநபர்கள் காப்பு கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பெரியாரை அசிங்கபடுத்துவதாக நினைத்து அவர் சிலைக்கு காவிசாயம் பூசி செருப்பு மாலையை போட்டனர் இந்து முன்னணியினர் இந்நிலையில் அண்ணாவின் சிலைக்கு மர்மநபர்கள் காப்பு கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெரியார், அண்ணாவின் கொள்கைகளுடன் நேருக்கு நேர் மோத முடியாமல் அவர்களின் சிலைக்கு சாயம் பூசுவது, செருப்பு மாலை போடுவதெல்லாம் தோற்றவர்களின் வேலை என்கிறார்கள் இணைய வாசிகள்.
இந்நிலையில் இன்று காலையிலேயே அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு இடது மற்றும் வலது புறங்களில் காப்பு கட்டுவதற்கு அடையாளமாக பூலப்பூ, ஆவாரம் பூ, வேப்ப இலை கொண்ட கட்டுகளை வைத்தும், பீடத்தின் இரு பக்கத்திலும் செங்கரும்பை மர்ம நபர்கள் தோகையுடன் வைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பலரும் இவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற நிலையில், இது தொடர்பாக அருகில் உள்ள கரூர் நகர காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த ஒரு போலீசார் அவற்றை தனது செல்போனில் படம் எடுத்தனர்.
பின்பு அருகில் இருந்த தள்ளுவண்டி வியாபாரி சிலையில் இருந்த கரும்பு மற்றும் காப்பு கட்டியிருந்ததை அப்புறப்படுத்தி
சாலையோரத்தில் கிடத்தினார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இன்று அனைத்து வீடுகளிலும் காப்பு கட்டுதலுடன் தொடங்கும், அதன் ஒரு பகுதியாக அண்ணாவின் மார்பளவு சிலைக்கு மர்மநபர்கள் காப்பு கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பெரியாரை அசிங்கபடுத்துவதாக நினைத்து அவர் சிலைக்கு காவிசாயம் பூசி செருப்பு மாலையை போட்டனர் இந்து முன்னணியினர் இந்நிலையில் அண்ணாவின் சிலைக்கு மர்மநபர்கள் காப்பு கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெரியார், அண்ணாவின் கொள்கைகளுடன் நேருக்கு நேர் மோத முடியாமல் அவர்களின் சிலைக்கு சாயம் பூசுவது, செருப்பு மாலை போடுவதெல்லாம் தோற்றவர்களின் வேலை என்கிறார்கள் இணைய வாசிகள்.