ஆப்நகரம்

கருரில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கிய பாஜக!

கரூரில் வங்கி கடனுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக நடைபெற்றது

Authored bySM Prabu | Samayam Tamil 4 Dec 2022, 1:36 pm
மத்திய அரசின் திட்டங்களை விளக்கிக் கூறியும், ஒரு கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கி கடனுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக கரூரில் நடைபெற்றது.
Samayam Tamil மத்திய அரசு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கிய பாஜக
மத்திய அரசு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கிய பாஜக


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கிருபானந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநிலத் தலைவர் லோகநாதன், மாவட்டத் துணைத் தலைவர்கள் மகுடபதி, லோகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களான அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டும் திட்டம், மாட்டு கொட்டகை அமைத்தல், கிராம பகுதிகளில் விளைவிக்கும் விலை பொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் தொழில் கூடங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து, மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு நிர்வாகிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கிறிஸ்தவ சபைக்கு பாதை: பொதுமக்கள் போராட்டம்!
மேலும், மத்திய அரசின் திட்டங்களில் இணைந்த பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்குவதற்கான ஆணைகளை பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநில தலைவர் லோகநாதன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கடனுக்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி