மத்திய அரசின் திட்டங்களை விளக்கிக் கூறியும், ஒரு கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கி கடனுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக கரூரில் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கிருபானந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநிலத் தலைவர் லோகநாதன், மாவட்டத் துணைத் தலைவர்கள் மகுடபதி, லோகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களான அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டும் திட்டம், மாட்டு கொட்டகை அமைத்தல், கிராம பகுதிகளில் விளைவிக்கும் விலை பொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் தொழில் கூடங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து, மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு நிர்வாகிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், மத்திய அரசின் திட்டங்களில் இணைந்த பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்குவதற்கான ஆணைகளை பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநில தலைவர் லோகநாதன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கடனுக்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கிருபானந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநிலத் தலைவர் லோகநாதன், மாவட்டத் துணைத் தலைவர்கள் மகுடபதி, லோகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களான அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டும் திட்டம், மாட்டு கொட்டகை அமைத்தல், கிராம பகுதிகளில் விளைவிக்கும் விலை பொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் தொழில் கூடங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து, மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு நிர்வாகிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், மத்திய அரசின் திட்டங்களில் இணைந்த பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்குவதற்கான ஆணைகளை பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநில தலைவர் லோகநாதன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கடனுக்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.