ஆப்நகரம்

கோயிலில் கூழ் வழங்கிய பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு!

கரூர் மாரியம்மன் கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த தனலட்சுமி என்பவரின் 5 பவுன் தாலிக்கொடி பட்டப்பகலில் பறிக்கப்பட்டது.

Samayam Tamil 30 Jul 2021, 5:10 pm
கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. ஆடி 2ஆம் வெள்ளி என்பதால் கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்களுக்குக் கூழ் வழங்கினார்.
Samayam Tamil கோயிலில் கூழ் வழங்கிய பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு!


இதனையடுத்து அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு பொது மக்கள் கூட்டமாகக் கூடி கூழ் வாங்கிக் கொண்டு இருக்கும் போது திடீரென தன் கழுத்திலிருந்து 5 பவுன் தங்கத் தாலிக்கொடி காணவில்லை எனத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அருகிலிருந்த காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோயில் வாசலில் கூட்டத்தோடு கூட்டமாகக் குனிந்து அம்மனுக்குக் கூழ் ஊற்றும் போது, அடையாளம் தெரியாத நபர் லாவகமாகப் பறித்து எடுத்த சம்பவத்தால் பரபரப்பானது. இது குறித்து கரூர் நகரக் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி