ஆப்நகரம்

ஊரடங்கு நேரத்தில் போராட்டமா?: கரூரில் 48 பேர் மீது பாய்ந்தது போலீஸ் வழக்கு!

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் மீது வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2021, 9:59 pm
ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 40 பேர் மீது மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


கரூர்-கோவை ரோடு, பசுபதிபாளையம், வெங்கமேடு, தாந்தோணிமலை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 40 பேர் மீது கரூர் போலீசார் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெற்கு ரயில்வே : சேலம் கோட்டத்தில் முக்கிய அறிவிப்பு!
இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே டிஎன்பிஎல் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு வட்டார தலைவர் தீனதயாளன் உள்ளிட்ட 8 பேர் மீது அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி