ஆப்நகரம்

அரசு பள்ளியில் ஆபாச ஆசிரியர்கள்… கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு!

கரூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆபசமாக பேசிக்கொண்ட ஆடியோ வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 May 2022, 12:12 pm
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ராஜலிங்கம், கணித ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil Tamil Nadu govt school
கோப்புப்படம்


அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் செல்வம் என்பவருக்கும், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக அருகில் உள்ள மற்றொரு அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ராஜலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபசமாக பேசி கொலை மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
மாரியம்மன் கோயில் திருவிழா… கரூரில் போக்குவரத்து மாற்றம்!

இதனிடையே, செல்போனில் ஆபாசமான வார்த்தைகளால் பேசியது, அவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது, பொதுமக்களிடையே அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக ஆசிரியர்கள் விஜயகுமார், ராஜலிங்கம் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த பள்ளியை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்றார், மேலும், நியூஸ் சொல்ல வாய்ப்பில்லை என இணைப்பை துண்டித்துக் கொண்டார்.

அடுத்த செய்தி