ஆப்நகரம்

கொளுத்திய வெயில்.... குளிர்வித்த மழை!

கரூர் நகரில் பல்வேறு இடங்களில் காலை முதல் வெயில் கடுமையாக சுட்டெரித்த நிலையில் மதியம் மழை பெய்தது.

Samayam Tamil 27 Apr 2021, 2:10 pm
கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் கோர தாண்டவம் அதிகரித்து வந்தது. இன்று காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டியது. திடீரென மதியம் ஒரு மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
Samayam Tamil மழை காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன
மழை காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன


மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவன் சாவு!

கரூர் பேருந்து நிலையம், ஜவகர் பஜார், வெங்கமேடு, காந்திகிராமம், திருமாநிலையூர், லைட் ஹவுஸ் கார்னர், பைபாஸ் சாலை, வடிவேல் நகர், வேலுச்சாமி புரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக பெய்த இந்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்த செய்தி