ஆப்நகரம்

கரூர் வேட்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு: அதிர்ச்சி பின்னணி!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

Samayam Tamil 30 Mar 2021, 7:37 am
கரூர் காமராஜபுரம் மேற்கு பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் கண்ணன். வீட்டு அலங்காரத் துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சமூக செயல்பாட்டாளர். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil கரூர் வேட்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு: அதிர்ச்சி பின்னணி!


இந்த சூழலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இவருக்குக் குப்பைத் தொட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வருமான வரித்துறையினர் இன்று காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளனர். கரூர், கோவை மாவட்டங்களிலிருந்து வந்த 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் கோமணம்தான் மிஞ்சும்: அண்ணாமலை ஐபிஎஸ் ஓய்வு!

கரூர் சட்டமன்ற தேர்தலில் நடைபெறும் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்கு எதிராகத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பல முறை புகார் அளித்ததன் விளைவாக ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.t

அடுத்த செய்தி