ஆப்நகரம்

முதல் பரிசு 21 காளை.. இரண்டாம் பரிசு 7 காளை.. நிறைவு பெற்ற குளித்தலை ஜல்லிக்கட்டு..

குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை நிறைவு பெற்றது. 59 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 19 Jan 2023, 7:36 pm
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொங்கல் பண்டிகையை ஒட்டி வருடா வருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதன்படியே இன்றும் குளித்தலை அருகே ஆர். டி. மலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
Samayam Tamil Kulithalai jallikattu


அந்தப் போட்டியினை கரூர் மாவட்ட டிஆர்ஓ லியாகத் அலி கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியை ஏற்ற பிறகு களத்தில் இறங்கினர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்தப் போட்டியானது ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. மேலும் அந்தப் போட்டியில் 890 மாடுகள் டோக்கன் பெறப்பட்டன.

31 கோவில் காளைகள் உட்பட 791 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 129 காலைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

காளைகளை அடக்க 375 வீரர்கள் மல்லுக்கட்டி காளையின் திமிலை பிடித்து அடக்க முற்பட்டனர். இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், ஃபேன், கட்டில் குக்கர், தங்க காசு, கட்டில், பீரோ, சைக்கிள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

மாடுபிடி வீரர்கள் 25, பார்வையாளர்கள் 18, மாட்டின் உரிமையாளர்கள் 16 என 59 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டாம் சுற்று நிறைவடையும் நிலையில் இருந்த போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலை கம்பி ஓரமாக அமர்ந்திருந்த மாடு பிடி வீரர் வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவகுமார் (21) மாடு குத்தியதில் வலது கண் வெளியில் வந்து பார்வை பறிபோனது. காயம் அடைந்தவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மணப்பாறையைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கவிபிரியா என்பவரின் மாடு வெற்றி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 21 காளைகள் அடக்கி முதல் இடம் பிடித்தார்.

திருச்சி மாவட்டம் சாந்தபுரத்தை சேர்ந்த ரஞ்சித் 7 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஒரு ஜல்லிக்கட்டு காளை மாடும், விழா கமிட்டி சார்பில் ஒரு வாஷிங் மெஷின் வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு பெற்ற ரஞ்சித்துக்கு சோபா செட் விழா கமிட்டி சார்பாக வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம், கீரிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி செல்வம் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கமிட்டி சார்பில் சைக்கிள் ஒன்றும், மேலும் உயர் நீதிமன்ற நியமித்த தன்னாட்சி ஆய்வுக்குழு சார்பில் பத்தாயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி